திருமங்கலத்திற்கும்
மதுரைக்குமான எனது தினசரி வேலைக்கான பயணங்களுக்கிடையே திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர்
பகுதிகளில் “குடிவிடு” என்ற நூல்வெளியீட்டு விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் என்னை இயற்கையாகவே
அதன்பால் ஈர்த்தன. சரி என்னதான் சொல்கிறது நூல் மற்றும் பேச்சாளர்கள் என்பதனை அறியும்
நோக்கில் அக்டோபர் 1ல் மதிய உணவிற்கு பின்பு ஒரு குட்டி உறக்கம் என்ற பெயரில் நீண்ட
தூக்கத்தினை தொடர்கையில் திடீரென்று எழுப்பிய பொழுது மணி மாலை5 ஐ தாண்டி இருந்தது.
உடன் எழுந்து குட்டி குளியலை போட்டுவிட்டு எனது பைக் தனை இயக்கி கியர்தனை முறுக்கி
திருமங்கலம் நகர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்நிலையங்களில் நாளை விடுமுறை என்பதால்
இல்லம் சென்றடைய பலர் முண்டியடித்து பஸ்களில் இடம்பிடிப்பதும் சாலைகளை கடப்பதுமாக ஜனநெருக்கடிகளை
கடந்து கொண்டிருக்கையில் எனது கவனம் அனைத்தினையும்
சாலையில் வைத்து திருமங்கலத்தினை கடக்கையில் மறவன்குளம் கண்மாய் அருகில் மாலையில் அடித்த
வெயிலுக்கு பகரமாக விண்ணவன் மழைச்சாரலினை வழங்க
அந்த இனிய குளிர்காற்றினை கிரகித்தவனாக பைக் வேகத்தினை அதிகப்படுத்தி கப்பலூர் பாலத்தில்
ஏறி இறங்குகையில் மயில்களின் அகவல்குரல்களை ரசித்துக்கொண்டே செல்கையில் கப்பலூர் காலனி
மரங்களின் பறவைகள் நாங்கள் என்ன மயிலுக்கு குறைவானவர்களா என போட்டியிட்டு தங்களது ரீங்கார
குரல் கொண்டு அந்தப்பகுதி முழுவதினையும் ஆக்கிரமித்தன,
புதன், 9 அக்டோபர், 2013
சனி, 7 செப்டம்பர், 2013
டாஸ்மாக் மாற்றங்கள்
டாஸ்மாக்
இணை இயக்குநராக திரு.மோகன் அவர்கள் நியமிக்கப்பட்ட பின்பு சென்ற ஆகஸ்டில் தினசெய்தித்தாள்கள்
டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க முதல்வர் அம்மா அவர்கள் தனிக்குழு ஒன்றினை
அமைத்து இருப்பதாக செய்திகள் வெளியிட்டன.அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கொள்முதல் அதிகாரி
வேறு துறைக்கு மாற்றப்பட டாஸ்மாக்கில் மாற்றங்கள் பல தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மாற்றங்கள்
என்பது மாறாதது என்ற பொன்மொழிக்கேற்ப டாஸ்மாக்கில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசையாக
காண்போம்.மாற்றங்களினால் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பயன்பெறுவதும் ஊழியர்களின்
வாழ்க்கைத்தரத்தின் நிலையில் மட்டும் மாற்றம் என்பதே ஏமாற்றமாக மட்டும் இருந்து
வருவதினை பற்றிய கட்டுரை
சரக்கு குவிப்பு:
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை டாஸ்மாக் கடைகளுக்கு, சராசரி
விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக அதாவது,
60 - 90 நாட்களுக்கு தேவையான சரக்குககள் அனுப்பப்பட்டு வந்தது.இதனால், அதிகமான அளவிற்கு சரக்கு
இருப்பு வைக்கப்படுவதால், பல
இடர்பாடுகளை டாஸ்மாக் ஊழியர்கள்
சந்தித்தனர்.
வியாழன், 15 ஆகஸ்ட், 2013
கருப்புக்கு சரக்கு.
தமிழகத்தின் கிராமங்களின்
காவல் தெய்வமாக விளங்குவதில் முதலிடம் வகிப்பவர் கருப்பசாமி ஆகும்.கருப்பசாமி
சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு
கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று
சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச்
சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு
அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக்
குழைத்துப் பூசி அனுப்பும் (மூடப்)பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு'
என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும்
பொருள்களும் உண்டு. கரும்பு சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக்
கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம். தமிழ்நாட்டு காவல்
தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி
அருள்பாலித்து வருகிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

