ஞாயிறு, 26 மே, 2013

புதுசரக்கு 5

புதுசரக்கு 5

நமது டாஸ்மாக்கில் புது சரக்கு அறிமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது மெக்டோவல் நிறுவனம் லூயிஸ் வெராண்ட் எக் ஸ் ஓ என்ற பிரஞ்ச்வகை பிராந்தியினை அறிமுகம் செய்துள்ளது.

திங்கள், 13 மே, 2013

நவீன பரதேசி


மசாலா நிறைந்த நமது தமிழக திரைப்படதுறையில் அத்திபூத்தார் போல எப்பொழுதாவது தொழிலாளிகள் படும் கஷ்டங்களை எடுத்துகாட்டிடும் திரைப்படம் வெளிவரும். மாநகரங்களில் துணிக்கடைகளில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை "அங்காடி தெரு" என்ற திரைப்படம் மூலம் கண்ட நமக்கு அந்த வரிசையில் கமர்சியல் அதிகம் கலக்காமல் வந்து நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் பாலாவின் "பரதேசி" படம் பார்த்தவுடன் அன்றைய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் படும் இன்னல்கள் இன்றைய டாஸ்மாக் ஊழியர்களின் நிலையினை எல்லாவிதங்களிலும் ஒத்திருப்பதினைக் கண்டு நாளைய தலைமுறையினர் நமது வாழ்கையினையும் படம்பிடிப்பது திண்ணம் என்பதினால்  அக்கதைக்கான எனது முன்னுரையை இங்கே தீட்டுகின்றேன். பரதேசி படத்தின் தேயிலை தோட்டத் தொழிலாளிக்கும் நமது டாஸ்மாக் ஊழியருக்குமான ஒற்றுமைகளை பட்டியலிடுகின்றேன்.


செவ்வாய், 30 ஏப்ரல், 2013

குடி குற்றம் யார் மீது?


தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனையை ஆரம்பித்தபின்பு சுமார் 3000 கோடி விற்பனையிலிருந்து 23000கோடியை நோக்கி ராக்கெட் வேகத்தில் மதுவிற்பனையின் அளவானது வானளவு உயர்ந்துள்ளது.இந்த குடி
குற்றத்திற்கு யார் காரணம் என படூ சீரியஸாக சிந்தித்து கட்டுரைக்குள் நுழைந்தால் மன்னிக்கவும் இது அதுமாறியது இல்லாமல் புதிதாக சிந்திப்பவர்களுக்காக.சமீபத்திய தமிழக திரைப்படங்களில் ஓருபாடலாவது டாஸ்மாக் பாரில் வைத்து எடுத்துவிடுகின்றனர்.அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள "கேடிபில்லா கில்லாடி ரங்கா" திரைப்படத்தில் "ஓரு புறப்போக்கு " என ஆரம்பிக்கக்கூடிய பாடலில் குடியை இந்த ஆண்டின் துவக்கத்தோடு நிறுத்திவிட எண்ணி மூன்று  நண்பர்கள் பாடுவதாக அமைந்த பாடல் இறுதியில் ஓரு புல் பாட்டில் ஆர்டர் கொடுத்து குடியை தமிழககுடிமக்களால் விடமுடியாது என்ற புரட்சிகர கருத்தினை பரப்பியிருப்பர்.நமது பங்கிற்கு அந்த பணியை இக்கட்டுரையில்  செய்துள்ளோம்.மது ஓழிப்பு  நண்பர்கள் மன்னிக்கவும்.