ஞாயிறு, 13 மே, 2012

எந்த கட்சி நம் கட்சி


இன்று தமிழகத்தில் நால்வர்கள் ஒன்றுகூடி பேசினால் பேசுபவர் தவறு செய்யும் அரசையோ,தவறு செய்யும் தலைவரையோ சாடி பேசினால் உடன் நீ எந்த கட்சி என்று எதிர் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழகத்து பத்திரிக்கை களும் தொலைகாட்சி நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒருகட்சியின் முகமூடியை அணிந்தே வளம் வருகின்றன.தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு கட்சியில் அங்கம் வகிப்பவராகவோ அல்லது ஏதாவது தனிப்பட்ட கொள்கையுடைய அமைப்புகளின் ஆதரவாளராகவோ கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று முற்போக்காக சிந்திப்பதாக கூறிக்கொள்ளக்கூடிய கட்சியை சேர்ந்தவர்கள் கூட விரும்புகின்றனர்.ஆனால் உண்மையில் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையாளர்கள்  எந்த கட்சியையும் சேராதவர்களாகவே உள்ளனர் என்பதே உண்மை. உண்மையான அறிவுஜீவிகள் யாரும் எந்தக்கட்சியையும் கண்முடி தனமாக ஆதரித்து ஒருகட்சி சார்புடையவராக இருக்க வாய்ப்பே இல்லை.

செவ்வாய், 8 மே, 2012

மருத்துவமும் போராடி பெறு


கடலூரைச் சேர்ந்தவர் . பாலமுருகன். இவர் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

புதன், 2 மே, 2012

டாஸ்மாக் சிஐடியூ மாநில மாநாடு சிறப்பு செய்திகள்


தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியூ) 3-வது இரு நாள்கள் நடைபெறும் மாநில மாநாடு திருநெல்வேலியில் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளான திங்கள்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஜெயபிரகாசன் தலைமை வகித்தார். மாலைவரை அந்த அறிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.. இரண்டாம் நாளான மே 1 செவ்வாய் அன்று சம்மேளன பொதுச்செயலாளர் பழனிவேலு, சிஐடியு., உதவி பொதுச்செயலாளர் கருமலையான், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சம்மேளன தலைவர் ஜெயபிரகாசன், துணைத்தலைவர் ஆல்துரை, சிஐடியு., மாநில துணைத்தலைவர் ராஜாங்கம், மாவட்ட செயலாளர் மோகன், வரவேற்புக்குழு பொருளாளர் இளமுருகு உட்படபலர்பேசினர்.
 இறுதியாக சிஐடியூ மாநில பொதுச்செயலரும், எம்எல்ஏவுமான .சவுந்திரராஜன் எம்.எல்.., கலந்துகொண்டு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.