பண முதலைகள் ஆட்சி! பாரதத்தின் வீழ்ச்சி!
சில்லரை
வணிகம் துவங்கி அனைத்திலும் அந்நிய மூதலீடு
முலம் நம்மை அடிமைநிலைக்கு தள்ளி
மீண்டும் சுதந்திரபோராட்டம் நோக்கி நம்மை நடக்க
செய்யவிருக்கும் நமது மத்திய மன்மோகன்சிங்
அரசு தொழிலாளர்கள் நலச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை பன்னாட்டு
கம்பெனிக்கு ஆதரவாக நிறைவேற்ற துடித்தது
நாம் அனைவரும் அறிந்ததே.அப்படிப்பட்ட மத்திய அரசின் தொழிலாளர்
நல அமைச்சரே மாநில அரசுகள் தொழிலாளர்நலனில்
அக்கறை கொள்வதில்லை என்கிறார். மொத்தத்தில் இந்தியா முழுமைக்கும் தொழிலாளர்
நலனில் அக்கறையற்ற நிலையே உள்ளது என்பது
வெட்டவெளிச்சமாகிறது.
இந்தியாவில்
மத்திய மற்றும் மாநிலத்தில் ஆளும்கட்சியாக
தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசியல் செய்யும் அனைத்து கட்சியினரும் பெரும்
பணமுதலைகளாக ,தொழிலதிபர்களாக வீற்று இருப்பதால் இயற்கையாகவே
தொழிலாளர் நலனுக்கு எதிராகவே சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களாக உள்ளனர்.அரசியல்வாதிகள் எதிர்கட்சியாக
இருக்கும் பொழுது தொழிலாளர்களுக்கு ஆதரவாக
பேசினாலும் ஆளும்கட்சியானவுடன் அதை மறந்து தொழிலாளர்களுக்கு
எதிராகவே செயல்படுகின்றன.பாராளுமன்றமும் சட்டமன்றங்களும் உழைப்பென்றால் என்னவென்றே தெரியாத ரெளடிகளையும்,பரம்பரை
பணக்காரர்களையும் கொண்டு செயல்படும் வரை
தொழிலாளர் முன்னேற்றம் ஒர் காணல் நீரே!