திங்கள், 30 அக்டோபர், 2017

பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா?

சமீப காலமாக  நெடுஞ்சாலை  மதுக்கடைகள் தொடர்பான நீதிமன்றங்களின் தீர்ப்பு மாறிமாறி வந்து மக்களை குழப்புகின்றது. நீதிதேவன் மயக்கம் மது விசயத்தில் கொஞ்சம் இருக்கத் தானே செய்யும் என்கிறீர்களா? தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக  படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவதாக அனைத்து  அரசியல்வாதிகளும் (மதுகம்பெனி முதலாளிகள்) வாக்குறுதி அளித்தனர். அம்மா ஆட்சி அமைந்தது.

அம்மா ஆட்சியில் பெயருக்கு 500 கடைகள் அடைக்கப்பட்டன. பின்பு அம்மா நோய்வாய்ப்பட்டு மரணித்தார்.


வெள்ளி, 7 ஏப்ரல், 2017

ஆயுள் தண்டனை போதுமே!


இந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை. அதற்கு அடுத்த படியான தண்டனை ஆயுள்தண்டனை. இந்த ஆயுள் தண்டனை என்பது சிறைச் சாலையில்  14 ஆண்டுகள்  கழித்தால் விடுதலை கிடைக்கும். டாஸ்மாக் ஊழியர்கள் என்ன குற்றம் இழைத்தார்களோ தெரியவில்லை
கம்பி வலைகளுக்குள்ளே 14 ஆண்டுகள் கழித்தும் இன்றும் விடுதலை கிடைக்கவில்லை. கடந்த 31.3.2017 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 3500 நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கண்துடைப்பு மதுவிலக்கு அமுல் நடவடிக்கையாக  1000 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அக்கடைகளின் ஊழியர்களை மீதம் இருந்த டாஸ்மாக் கடைகளிலேயே பணி பார்க்கப் பணிக்கப்பட்டனர். தற்பொழுது அடைக்கப்படும் 3500 டாஸ்மாக் கடை ஊழியர்களின் நிலை  இன்று மிகுந்த பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளது
கடந்த 2003ல் மாவட்ட ஆட்சியர்கள் நேரடி கண்காணிப்பில் வேலைவாய்ப்பு துறை பரிந்துரையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் 36000 பேர் ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். பல பணியாளர்கள் மதுவுக்கு மடிந்து மரணதண்டனை பெற்றுவிட்டனர். மேலும் பலர் வருமான போதாமல் வந்த வழியே திரும்பினர்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஒப்பந்த தொழிலாளராகவே ஓய்வு பெறுவோமா?


டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேலை கொடுத்த அம்மா பூலோக ய்வு பெற்று புத்துலகில் நுழைந்து விட்டார். டாஸ்மாக் ஊழியர்களான நம்மை 2003ல்   வேலை வாய்ப்பு அலுவலக மூப்பின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தேர்ந்தெடுத்தது முதல் இன்று வரை தற்காலிக ஒப்பந்த பணியாளராகவே பணியாற்றி வருகிறோம். நம்மில் பார் உதவியாளராக பணி பெற்று தற்பொழுது கடை விற்பனை உதவியாளர்களாக பணியாற்றும் பலரும் அடுத்த சில வருடங்களில் ஓய்வு பெறும் வயதை அடைந்து விட்டனர். மேலும் நம்மை கடந்த 13 வருடங்களாக தொழிலாளர்களுக்கான எவ்வித அரசு சலுகைகள் வழங்காமல் ஒப்பந்த பணியாளர்களாகவே வைத்து பணி வாங்கி வருகின்றனர். சென்ற தேர்தலில் திமுக மதுவிலக்கு கொண்டு வந்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க இருப்பதாக கூறியது.  அம்மா டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்கள். நாம் அவர்களின் வாக்கை நம்பி தொடர்ந்து பணியில் இருந்தோம். அம்மா மரணம் தொடர்ந்து அடைத்து வரும் கடைகள் என்கின்ற சிக்கலான சூழ்நிலையில் தற்பொழுது நாம் உள்ளோம்.