திங்கள், 30 அக்டோபர், 2017

பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா?

சமீப காலமாக  நெடுஞ்சாலை  மதுக்கடைகள் தொடர்பான நீதிமன்றங்களின் தீர்ப்பு மாறிமாறி வந்து மக்களை குழப்புகின்றது. நீதிதேவன் மயக்கம் மது விசயத்தில் கொஞ்சம் இருக்கத் தானே செய்யும் என்கிறீர்களா? தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக  படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவதாக அனைத்து  அரசியல்வாதிகளும் (மதுகம்பெனி முதலாளிகள்) வாக்குறுதி அளித்தனர். அம்மா ஆட்சி அமைந்தது.

அம்மா ஆட்சியில் பெயருக்கு 500 கடைகள் அடைக்கப்பட்டன. பின்பு அம்மா நோய்வாய்ப்பட்டு மரணித்தார்.