சனி, 29 நவம்பர், 2014

டாஸ்மாக் தினம்


இதேநாள் 29.11.2003அன்று டாஸ்மாக்சில்லரை மதுவிற்பனை துவங்கியநாள்
                
                      சிறைகதவுகளுக்குள் சிக்கிகொண்ட நாள்

டாஸ்மாக் உழைப்பாளிகளின் சிக்கல் குறித்த கவிதை


பட்ட மரங்கள்

பத்தாண்டுக்கு முன்
வைரம் பாய்ந்தவர்களாய்,
நிழல் தருபவர்களாய்,
வண்ணம் மிக்கவர்களாய்,
கனி தருபவர்களாய்...

இன்று
இளஞ்சாவுகளையும்,
இனிப்புநோயுடனே,
இளமையையும் இழந்து
பட்ட மரங்களாய்
பாம்புகளின் கூடமாய்
பன்னிரெண்டு மணி நாளுக்கு
பணியாற்றினாலும்
பகுதிநேர பணியாளனாய்
பற்றாக்குறை சம்பளத்தில்
பழகிய குடியால் தொடர்ந்து
டாஸ்மாக்கில்
லஞ்சமே லட்சியமாய்
லட்சங்களே இலக்காய்
அதிகாரிகள்.
லாகிரி விற்று
லாஸ்ஸில் நாங்கள்
உழைப்பாளிகள்
ஊதாரிகளாய் போனோம்
உலகில்.
விறகிற்காவது ஆவோமா?
வீண் கற்பனை...!
விஷசெடி விறகாவதில்லை.

கருத்துகள் இல்லை: